சங்கீதம் சவுபாக்கியம்
UPDATED : ஆக 20, 2013 | ADDED : ஆக 20, 2013
* பாவத்தைப் போக்கும் ஒரே வழி நாம ஜெபம் மட்டும் தான். 'ஹர ஹர' என்று சொல்லி வந்தால் துயர் தீர்ந்து விடும். * வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால் செயலில் அழகும், நேர்த்தியும் உண்டாகிவிடும். அதன்பின் எந்த துறையிலும் சாதிக்க முடியும்.* கடவுள் நமக்கு வாழ்வு அளித்திருக்கிறார். அதை நன்றியோடு எண்ணி, நல்லவர்களாக நமக்கும் பிறருக்கும் உதவி செய்ய வேண்டும்.* எல்லா தானங்களிலும் அன்னதானமே சிறப்பானது. இதில் மட்டுமே ஒருவரை முழுமையாக திருப்தி செய்யும் வாய்ப்புண்டு.* சங்கீதக்கலை மட்டுமே சிறிதும் கஷ்டமில்லாமல், சவுபாக்கியத்தை.. ஏன்.. மோட்சத்தையே கூட வாங்கிக் கொடுக்கும் சக்தி படைத்தது.* உடலை மட்டுமல்ல, மனதிலும் அழுக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.- காஞ்சிப்பெரியவர்