தேவையைக் குறையுங்கள்
* ஒரு ஜென்மத்தில் செய்த பாவத்தை மற்றொரு ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஈஸ்வரன் மறுபடியும் ஜென்மத்தை அளிக்கிறார்.* வாழ்க்கையில் போட்டி இருக்கிற வரை மனநிறைவு எவருக்கும் கிடைக்காது. வசதி அதிகரித்தாலும் வேறு ஏதோ வகையில் போட்டி இருக்கத்தான் செய்யும். * அனைவரிடம் அன்பாக இரு, தியாகம் செய், சேவை செய் என்று அனைத்து மதங்கள் கூறுவது போல் வாழ்ந்துவிட்டால், உடம்பு போன பிறகு உயிர் தானாக கடவுளிடம் போய்ச் சேர்ந்துவிடும்.* தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி குறையும். சவுக்கியம் குறையும், நிம்மதியும் திருப்தியும் குறையும். தரித்திரமும் துக்கமும் உண்டாகும்.* சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. ஆடம்பரம் இல்லாமல் கணக்காயிருப்பது தான் சிக்கனம். இதுவே தானமும் தர்மமும் செய்ய உதவும்.* தன் வேலையை பிறரிடம் விட்டுவிட்டு, தான் பிறருக்கு தொண்டு செய்ய செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்வது மோசடியாகும்.- காஞ்சிப்பெரியவர்