நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க!
* மனதிலுள்ள ஆசைகளைக் குறைப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பம் குறைந்து ஆனந்தம் பெருகும். வெளியிலுள்ள பொருட்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வருவதில்லை, நம்மிடையே இருந்து தான் ஆனந்தம் பிறக்கிறது.* உடல் மற்றும் மனரீதியாக செய்யும் பாவத்தை போக்க புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* துக்கத்துக்கு விதை போட்டுக் கொண்டிருக்காமல் பாவத்தை போக்க தினமும் ஈஸ்வர தியானத்தில் ஈடுபடுவது நல்லது.* உலகத்தில் எவரும் பாவியாக இருக்க விரும்பவது இல்லை, ஆனால், பாவகாரியம் அதிகம் செய்கிறோம். அனைவரும் புண்ணியம் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணியச் செயல்களைச் செய்வதில்லை.* ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது, அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.* ஒருவனிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தக்கூடாது. சிறிய அளவில் குண விசேஷம் இருந்தால் அதையே பெரிதாக கொண்டாட வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்