உள்ளூர் செய்திகள்

5 நிமிடமாவது பாடுங்களேன்!

* பாடுவதற்கு பெரிய சங்கீத ஞானம், ராகபாவம், குரல் வளம் இல்லாவிட்டாலும், பக்தி பாவனை அவசியம்.* தினமும் மாலை ஐந்து நிமிடமாவது, பகவான் நாமங்களைப் பாடிப் பஜனை செய்வது குடும்பத்திற்கு நல்லது.* அனைத்து பொருட்களையும் கடவுளாக பார்த்தால், மனதில் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட கஷ்டங்கள் ஏற்படுவதில்லை.* பரம்பொருளாகிய கடவுளே உண்மை. மற்றவை மாயையைத் தவிர வேறொன்றும் இல்லை.* இன்பமும், துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. இன்பத்தையும், துன்பத்தையும் விட்டுவிட்டால் நிம்மதி கிடைக்கும்.* முற்பிறவியில் போட்ட விதை நமக்கு துன்பத்தை தருகிறது. வாழ்வில் தவறான செயல்கள் செய்யாமல் இருக்க அம்பாளைப் பிரார்த்திப்பது நமக்கு விமோசனம் தரும்.* தாய் அன்பை அறியாத குழந்தை, தாயை எதிரியாக தவறாக அர்த்தம் பண்ணிக் கொண்டு அழுகிறது. தனக்கு தானே விரோதியாக இருப்பதை குழந்தையால் உணர முடியவில்லை.-காஞ்சிப்பெரியவர்