அளவாகப் பேசுங்கள்
UPDATED : ஜன 13, 2015 | ADDED : ஜன 13, 2015
* உலகத்தைப் படைத்து ஒழுங்கான கதியில் நடத்திச் செல்லும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே கடவுள் என்கிறோம்.* மனதில் தோன்றியதை எல்லாம் பேசித் திரியக்கூடாது. தேவையான சமயத்தில் தான் பேச வேண்டும். அதுவும் அளவாகவே இருப்பது அவசியம்.* அன்பினால் பிறருடைய குறைகளைத் திருத்துவதே சிறந்தது. அதுவே நிலைத்த பலனைக் கொடுக்கும்.* கோபத்திற்கு மனதில் இடம் தரக்கூடாது. மனம், உடல் இரண்டுமே கோபத்தால் பாதிப்படைகின்றன.- காஞ்சிப்பெரியவர்