நல்லதை மட்டும் பேசுங்கள்
UPDATED : செப் 21, 2012 | ADDED : செப் 21, 2012
* சொந்த விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்திச் செய்யும் செயல்கள், ஒருவனைப் பாவத்தில் தள்ளிவிடும். * ஒழுக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கி விட்டால்,நாம் ஈடுபடும் எல்லா செயல்களிலும் அதன் பிரதிபலிப்பைக் காணமுடியும். * எங்கு சென்றாலும் அந்த இடத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்க முயற்சிக்க வேண்டும். * புண்ணியம் செய்ய வேண்டும் என்று மனதளவில் எண்ணினாலும்,நூற்றில் எண்பது பங்கு பாவத்தையே செய்கிறோம். இதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. * ஒருவன் விரும்பியதை நியாயமான வழியில் அடையாமல், குறுக்கு வழியில் பெற முயற்சிப்பதே பாவம் தான். * நல்ல விஷயங்களைப் பேசினால், வாக்கினாலும் புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும். * செல்வம் அனைத்தும் நம்முடையது அல்ல என்ற எண்ணம் இருக்க வேண்டும். இந்த எண்ணம் நல்ல செயல்களைச் செய்ய தூண்டுகோலாக அமையும்.- காஞ்சிப்பெரியவர்