நன்றி சொல்லுங்கள்
UPDATED : பிப் 23, 2015 | ADDED : பிப் 23, 2015
* அன்பே சிவம் என்கிறது திருமந்திரம். அன்பால் அனைவருக்கும் ஆனந்தம் கிடைக்கிறது.* கண்ணில் கண்டவரிடம் எல்லாம் துன்பத்தைச் சொல்லி வருந்துவதை விட கடவுளிடம் சொல்வது நல்லது.* துன்பம் நீங்க வழிபாடு செய்வது போல, நலமோடு இருக்கும் போதும் கடவுளுக்கு நன்றி சொல்வோம்.* மறைந்த பின்னும், ஒருவர் செய்த நற்செயலின் பலனை உலகம் பெறுவதே மேலான தர்மம்.* தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வாழ்வின் தரம் உயர்வதில்லை.-காஞ்சிப்பெரியவர்