உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சிக்கான வழிகள்

* உலகில் அனைவரும் புண்ணியம் செய்ய நினைக்கிறோம். ஆனால், பெரும்பாலும் பாவச் செயலில் மட்டுமே ஈடுபடுகிறோம்.* ஆசையின்றி செய்யும் எந்தச் செயலும் பாவம் ஆகாது. மனதில் கொஞ்சம் ஆசை எழுந்தாலும் அது பாவகாரியமே.* வாக்கினால் புண்ணியம் செய்ய விரும்பினால், கடவுளின் திருநாமத்தைச் சொல்லுங்கள்.* மனம், வாக்கு, உடம்பு இந்த மூன்றாலும் நன்மையை மட்டுமே செய்து வர வேண்டும்.* நல்வழியில் பொருள் தேட வேண்டும். அதில் தர்மவழியில் சிறிது செலவழிப்பதே மகிழ்ச்சிக்கான வழி.- காஞ்சிப்பெரியவர்