மனதை சுத்தமாக்குவோம்
UPDATED : டிச 12, 2016 | ADDED : டிச 12, 2016
* குடியிருக்கும் வீடு சுத்தமாக இருந்தால் போதாது. மனம் என்னும் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.* பிறர் செய்யும் தவறை திருத்த வேண்டாம். முதலில் நமது தவறை விழிப்பாக இருந்து திருத்திக்கொண்டால் போதும்.* தானத்தில் சிறந்தது அன்னதானம். இதில் மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.* பக்தியில் ஈடுபடுவதால் கடவுளுக்கு எதுவும் ஆகப் போவதில்லை.- காஞ்சிப்பெரியவர்