உள்ளூர் செய்திகள்

உண்டியல் செலுத்துவது ஏன்?

* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். நமக்கு செயலுக்குத் தகுந்த பலன்களைத் தருபவர் அவரே. இந்த எண்ணம் நமக்கு இருந்தால்  தான் நம் மனம் தர்மவழியை விட்டு விலகாமல் இருக்கும். * கடவுளுக்கு காணிக்கையாகப் பணத்தை உண்டியலில் செலுத்துகிறோம். உலகைப் படைத்துக் காக்கின்ற பரம்பொருளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே வழிபாட்டில் இப்படி ஏற்படுத்தி இருக்கிறார்கள். * நம்முடைய சுகதுக்கங்களையே பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. நம்மால் முடிந்த நன்மைகளை உலகத்திற்கு செய்ய முயற்சிக்க வேண்டும்.* எந்தச்செயலையும் நியாயமாகச் செய்வது அவசியம். ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையினால் அநியாயமாகவும் அடைய முயற்சிக்கிறோம். அப்போது தான் நம்மைப் பாவம் தீண்டுகிறது. * ராமநாமத்தை தாரக மந்திரம் என்பர். தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்குவது என்று பொருள். மலையளவு பாவங்கள் இருந்தாலும் ராமநாமத்தைச் சொன்னால் நம் முன்வினைப்பாவங்கள் நசிந்து போகும்.-காஞ்சிப்பெரியவர்