வழிபாட்டின் நோக்கம்
UPDATED : ஜன 01, 2016 | ADDED : ஜன 01, 2016
* கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.* வெளிவேஷமாக நெற்றியில் திருநீறு பூசுவது கூடாது. திருநீற்றால் மனமும் உடலும் பரிசுத்தம் பெறுகிறது.* கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.* வெளியுலகத்தில் மகிழ்ச்சி இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.-காஞ்சிப் பெரியவர்