உள்ளூர் செய்திகள்

மனதை வசப்படுத்துங்கள்

* இளமையிலேயே மனதை வசப்படுத்த முயலுங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கையின் போக்கு திசை மாறும்.* நம்பிக்கை இல்லாமல் வளர்ச்சி இல்லை. நட்ட விதை மண்ணை நம்பி முளை விடுவது போல மனிதனும் கடவுளை நம்பி வாழ்வது அவசியம்.* பிறரது குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதோடு, அன்பு வழியில் அவர்களைத் திருத்தவும் செய்யுங்கள்.* படிப்பறிவை விட அனுபவமே சிறந்தது. குடியிருக்கும் வீடு போன்றது அனுபவம். அதை கட்டுவதற்கான வரைபடம் போன்றது படிப்பு.- அமிர்தானந்தமயி