உள்ளூர் செய்திகள்

மனம் நோகப் பேசக்கூடாது

<P>* உண்மையை மறக்காமல் எப்போதும் பொய்யை விலக்கி விட்டு வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். பிறருக்கு இதமானவற்றைச் செய்யுங்கள். இவ்வகையில் உண்மையை உரைத்தல் எப்போதும் கடினம் தான்.<BR>* உணவு வகைகளை மிதமிஞ்சி உண்ணும் பழக்கம்கூடாது. அது மிகமிகத் தீமையைப் பயக்கும். உணவுப்பொருள்களை தேவையோடு அளவாகத் தான் எடுத்துக் கொள்வது நல்லது. <BR>* ஊமையை ஊமை என்று சொல்வதும், நோயுற்றவனை நோயாளி என்றும் சொல்வது உண்மையாயினும் இவ்வாறெல்லாம் சொல்லுதல் சரியன்று. ஏனென்றால் இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் நோகும்.<BR>* தானம் நான்கு வகையாகும். அவை, உணவு, மருந்து,சாஸ்திரம், அபயம் என்பனவாகும். இந்த நான்கு வகை தானங்களும் அவசியம் செய்ய வேண்டியவை ஆகும்.<BR>* மன்னிப்பு கேட்பதன் மூலம் அன்பு செய்யும் குணம் உண்டாகும். அக்குணத்தின் மூலம் அச்சம் அகன்று விடும். தூய்மை நெஞ்சில் பிறக்கும். <BR>* புறத்தூய்மையை விட அகத்தூய்மையே மிகவும் சிறந்தது. புறத்தூய்மை வேண்டும் என்பதற்காக வாசனைத்தைலம் இட்டு நீராடுகின்ற மனமே கூடாது. <BR>-<STRONG>மகாவீரர்</STRONG></P>