உயிர்களை நேசியுங்கள்
UPDATED : அக் 01, 2012 | ADDED : அக் 01, 2012
* பொறுமை நல்லவர்களின் அடையாளம். பிறர் இகழ்ந்தாலும் கூட பொறுத்துக் கொள்பவனே நல்ல அறிஞன்.* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தார் அடக்கமில்லாமல் வாழும் துறவிகளைக் காட்டிலும் மேலானவர்கள். * செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.* எதையும் தீர ஆலோசித்து பேச வேண்டும். மிதமாகப் பேசுபவனையே பெரியோர்கள் மதிப்பர்.* நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பதே அகிம்சை. மனிதன் எல்லா உயிர்களையும் நேசித்து வாழப் பழக வேண்டும். * பாவச் செயல்கள் தொடக்கத்தில் இன்பத்தை அளித்தாலும் அதன் முடிவு துன்பமாகவே இருக்கும்.* எண்ணம், சொல், செயலால் நெறியோடு வாழ்வதே நல்லொழுக்கம்.* உண்மையாக நடக்கும் மனிதனுக்கு உபதேசம் தேவையில்லை. * சொல்லக்கூடாத விஷயத்தை மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பதே மேலானது.- மகாவீரர்