மிகவும் சிறந்தது பொறுமை
* பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். அதனால் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். * பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கம் செல்ல முடியாது.* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம். * அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவன்.* கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.* மனம் அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அந்த நிலையில் தான் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும். * அடக்கத்துடன் வாழ்பவன் இந்த பிறவி மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் இன்பமுடன் வாழ்வான்.* பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுப்பவனே அறிஞன்.- மகாவீரர்