உள்ளூர் செய்திகள்

கடவுளை தாயாக பார்

* நல்லது செய்ய வேண்டும் என்பதை கொள்கையாக ஏற்றுக்கொள். அதில் துன்பத்தை சந்தித்தாலும் பின்வாங்காதே.* உள்ளம் உருகி வழிபட்டால், கடவுளின் அருள் எளிதில் கிடைக்கும்.* விரும்பிய வடிவில் கடவுளை வழிபாடு செய்யலாம். அதிலும் தாயாகக் கருதுவது சிறப்பு.* ஒரு விஷயத்தை கவுரவித்தால் அன்றி, அதன் மகத்துவத்தை உணர இயலாது.* வாழ்வின் ஜீவநாடியான நீதியை காப்பது நம் கடமை.* துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே, சுகத்தின் அருமையை உணர இயலும்.-ராஜாஜி