வெற்றிக்கான நல்வழிகள்
UPDATED : பிப் 03, 2013 | ADDED : பிப் 03, 2013
* தியானத்தில் உள்ளத்தை ஈடுபடுத்த பழக்கி விட்டால் இறையருள் கிடைத்துவிடும். * நன்னடத்தை, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை ஆகியவை வெற்றிக்கான நல்வழிகள்.* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நீ சிரிக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்து இறைவன் சிரிக்கிறான்.* ஒரு விஷயத்தைக் கவுரவித்தால் ஒழிய, அந்த விஷயத்தின் உண்மை நமக்குப் புலப்படுவதில்லை. * அதர்மமான ஆசை மனதில் முளைவிடத் தொடங்கும்போதே தாமதமின்றி அதைக் களைய முற்படுவது அவசியம்.* பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயல்வதில் ஒரு அவமானமும் கிடையாது.* துன்பத்தின் சுமையை அனுபவிக்கப் பழகினால் ஒழிய, சுகத்தின் அருமையை ஒருவனால் தெரிந்து கொள்ள முடியாது.* துக்கப்படுவதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைப்பதில்லை.* மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஒழுக்கம் தேவை. அதுவே அடிப்படையும் கூட.- ராஜாஜி