உள்ளூர் செய்திகள்

அறிவால் வெல்லுங்கள்

* உள்ளம் கரைந்து உருகி வழிபடுங்கள். கடவுளின் அருளை பெறுவீர்கள்.* பிழைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதில் அவமானமில்லை.* கீழான ஆசை மனதில் முளை விடும் போதே அகற்றுவது நல்லது. வளர விட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும்.* எந்த விஷயத்திற்கும் கவுரவம் அளிக்கா விட்டால், அதன் உண்மைத் தன்மையை அறிய முடியாது.* கவலைப்படுவதால் பிரச்னை தீர்வதில்லை. அறிவின் துணையுடன் வெற்றி காண முயலுங்கள். * துன்பத்தின் கடுமையை உணர்ந்தவனால் மட்டுமே சுகத்தின் அருமையை உணர முடியும்.-ராஜாஜி