உள்ளூர் செய்திகள்

படிப்பை விட உயர்ந்தது

* படிப்பதை விட கற்றவர்களிடம் கேட்பது உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது சிறந்தது.* அநியாயம், பொய் இவற்றைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவன் நல்லவனாக இருக்க முடியாது.* ஆன்மிக வாழ்வின் முதல் அடையாளம் சாந்தம். இரண்டாவது ஆணவம் இல்லாத தன்மை.* பசுவைத் தேடும் கன்றுக்குட்டி போல கடவுளைக் காண பக்தனின் மனம் துடிக்க வேண்டும்.* பக்தியுணர்வை ஏற்படுத்தவே திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.- ராமகிருஷ்ணர்