இனி எல்லாம் நலமே!
UPDATED : அக் 02, 2014 | ADDED : அக் 02, 2014
* கடுகடுத்த எண்ணம், பேச்சினை அறவே கைவிடுங்கள். அனைவரிடமும் அகம் குளிர முகமலர்ச்சியுடன் பழகுங்கள்.* கனவிலும் வஞ்சனை எண்ணம் இல்லாதநல்லவருக்கே கடவுளின் அருள் கிட்டும்.* கடவுளின் கருணைக்கு நிகரான கருணை வேறில்லை. அவரை வாழ்த்தி வணங்கினால் எல்லாம் நலமாக அமையும்.* கொடுமையான நோன்பு இருப்பதைக் காட்டிலும் உயிர்களைக் கொல்லாமையே விரதங்களில் சிறந்தது.* பிறரைக் குறை சொல்லாமல், நாம் நடக்கும் வழியில் குற்றம் நேராமல் பார்த்துக் கொள்வது நல்லது.- வள்ளலார்