உள்ளூர் செய்திகள்

எண்ணம் செயலாகட்டும்

* வெளியே வெளிச்சம். உள்ளே இருட்டு என்று மனிதன் வாழ்வது கூடாது. உள்ளும் புறமும் தூய்மையுடன் இருக்க வேண்டும்.* கருணை உள்ளத்தில் ஊற்றாய் பெருகட்டும். உடம்பெங்கும் வழிந்தோடட்டும்.* எங்கு அன்பு நெஞ்சம் இருக்கிறதோ, அங்கு தான் கடவுளும் இருக்கிறார் என்பதை உணருங்கள்.* பக்தியால் கண்ணீர் பெருக்குங்கள். அந்த கண்ணீரால் உடம்பு மட்டுமின்றி உள்ளமும் நனையட்டும்.* உள்ளத்தில் நல்லதை ஆழமாக எண்ணுங்கள். எண்ணியதை நிறைவேற்ற உடனே செயல்படுங்கள்.- வள்ளலார்