உள்ளூர் செய்திகள்

பொழுது போக்குகளில் ஈடுபடாதீர்கள்

* தன்னம்பிக்கை ஒன்றே நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளியே வரவழைக்கும் ஆற்றல் கொண்டது.* நல்லவர்களின் தியாகச் செயல்களால், ஒட்டு மொத்த மனித சமுதாயமே நன்மை பெறுகிறது.* வீணான பொழுது போக்குகளில் ஈடுபடாதீர்கள். விளையாட்டுப் புத்தியால் மனதின் ஆற்றல் சிதறடிக்கப்பட்டு விடும்.* தற்போது இருக்கும் நிலைக்கு நாமே முழு பொறுப்பாளி. ஆனால், பிறரைக் குறை சொல்வதிலேயே காலத்தை வீணாக்குகிறோம்- விவேகானந்தர்