உள்ளூர் செய்திகள்

சுயநலத்தை ஒழியுங்கள்!

* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி பெற முடியாது.* மனித இதயத்தின் அடிஆழத்தில் கடவுள் ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன்.* கோபம் மனிதனை முன்னேற விடாமல் தடுக்கிறது. அமைதியுடன் நிலைகுலையாத மனம் படைத்தவனே பணியில் சிறக்க முடியும்.* மற்றவரைக் குறை கூறுவது மனித இயல்பு. நம் கண்களை நாம் பார்க்க முடியாதது போல நம் தவறுகளை நாம் உணர்வதில்லை. * பெற்றுக் கொள்வதில் பெருமை என்ன இருக்கிறது? கொடுப்பவனே வாழ்வில் பேறு பெற்றவன் ஆவான்.* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. * நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.- விவேகானந்தர்