உள்ளூர் செய்திகள்

பிறருக்காக வாழுங்கள்

* வாழ்க்கையில் முன்னேற துணைபுரிவது எதுவோ அதுவே நன்மை. கீழ்நோக்கி வீழ்ச்சிக்குத் துணை புரிவது எதுவோ அது தீமை.* தன்னம்பிக்கை கொண்டவன் வாழ்வு சரித்திரத்தில் இடம் பிடிக்கும். இந்த உண்மையை எப்போதும் மறந்து விடாதே.* பொறாமையும், சோம்பலும், வெறுப்பும் அடிமையின் இயல்புகள். உள்ளத்தில் இவற்றை நுழைய அனுமதி அளிக்காதே.* சுயநலத்தோடு வாழாதே. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறக்கவே பழகு.* உயிர் வாழ்வதற்கு அறிகுறியே, வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சி அடைவது தான். துணிந்து நின்று பணி செய்தால் தான் இது சாத்தியம். எனினும், அதில் கிடைக்கும் பலனை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் வேண்டும். - விவேகானந்தர்