உண்மையைக் கடைபிடி!
UPDATED : நவ 10, 2014 | ADDED : நவ 10, 2014
* சுதந்திரமானவனாக இரு. யாரிடமும் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதே. * ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதையே உன் வாழ்க்கை மயமாக்கு. உடலின் நாடிநரம்பெல்லாம் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். * நம்பிக்கை ஒருபோதும் இழந்து விடாதே. நீ அடைய வேண்டிய லட்சியத்தை நோக்கி முன்னேறு. * எல்லாவிதமான அறிவும் ஆற்றலும் உனக்குள்ளே குடி கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே. * உண்மையில் பிடிப்புடன் இருந்து வா. மெதுவாகவே என்றாலும் நிச்சயம் உனக்கே வெற்றி கிடைக்கும். - விவேகானந்தர்