வலிமை குறித்து சிந்தியுங்கள்
UPDATED : பிப் 02, 2012 | ADDED : பிப் 02, 2012
* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.* அறிவுச்சுரங்கத்தை திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடு மட்டுமே. மன ஒருமையால் இயற்கையைக் கூட நம்மால் வெல்ல முடியும்.* கடவுளின் குழந்தைகளான நீங்கள் வலிமை உடையவர் என்று நினைத்தால் வலிமை படைத்தவர் ஆவீர்கள்.* பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.* மனிதனிடம் மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது கல்வி. முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொண்டால் கட்டளையிடும் பதவியை தானாகப் பெற்று மகிழ்வீர்கள்.* அனைத்து தேவைகளை நிறைவேற்றவும், அனைத்து துன்பங்களையும் நீக்கும் பேராற்றல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உணருங்கள்.- விவேகானந்தர்