இதுவே இனிய சொர்க்கம்
UPDATED : டிச 23, 2015 | ADDED : டிச 23, 2015
* கருணையே இனிமையான சொர்க்கம். நாம் அனைவரும் கருணை நிறைந்தவர் களாக மாற வேண்டும்.* எந்த மனிதன் தன்னை வெறுக்கிறானோ அவனுக்கு அழிவின் வாசல் திறக்கும்.* அறிவோடு ஒரு செயலை செய்யும் போது தான் பிழை இல்லாமல் இருக்கும். இதை ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.* கோபத்தில் இருக்கும் போது மனிதனால் வேலை களைச் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை.* சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணிவேர்.-விவேகானந்தர்