உள்ளூர் செய்திகள்

முன்னேற்றத்திற்கு வழி

* உலகிற்கு நன்மை செய்வதே வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.*அமைதியுடன் உன்னால் முடிந்த நற்செயல்களில் மட்டும் ஈடுபடு.* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் கவலைப்படாதே. கோழையாகவும், கபடதாரியாகவும் இருக்காதே.* நம்பிக்கை, நேர்மை, பக்தி இந்த மூன்றும் உன்னிடம் இருக்கும் வரை முன்னேற்றம் அடைவாய்.* உள்ளத்தை அடக்கிப் பழகினால், உலகில் எதற்கும் அடிமையாக வாழத் தேவையில்லை.* சுயநலத்துடன் வாழ்வது தீமையைத் தரும். பொது நலத்துக்காக வாழப்பழகு.-விவேகானந்தர்