உழைப்பால் சாதிப்போம்
UPDATED : மார் 11, 2015 | ADDED : மார் 11, 2015
* மனதில் பலம் நிறைந்திருந்தால், உங்களின் விதியை நீங்களே வகுத்துக் கொள்ள முடியும்.* பிறருக்கு கொடுத்து உதவுங்கள். உதவி பெறுபவரைக் கடவுளாகவே மதியுங்கள்.* யார் வேண்டுமானாலும் தலைவனாக செயல்படலாம். ஆனால், நல்ல தொண்டனாக இருப்பது கடினம்.* மகத்தான செயல் எதுவும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடிவதில்லை.* வெற்றியில் விருப்பம் இருக்குமானால், ஆணவத்தை முதலில் ஒழித்து விடுங்கள்.* மனத்துாய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காண்பது உறுதி.விவேகானந்தர்