உள்ளூர் செய்திகள்

அமைதி பெற என்ன வழி

* அகத்தூய்மை இல்லாவிட்டால் புறத்தூய்மையால் பயனேதும் இல்லை. ஆன்மிக ஒளியற்ற மனிதன் எவ்வளவு அழகுடையவனாக இருந்தாலும் விலங்குக்குச் சமமாவான்.* மனத்தூய்மை பெற்று விட்டால் நம்மிடம் உயர்குணங்கள் மேலோங்கும். மனம் ஒருமுகப்படும். உற்சாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும். * இறைவன் பெரிய காந்தக்கல்லைப் போல இருக்கிறார். நாம் அனைவரும் இரும்புத்துகள் போல அவரால் கவரப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.* வாழ்நாளில் நாம் செய்ய வேண்டிய வேலை என்ன தெரியுமா. காந்தக் கல் போல இருக்கும் இறைவனை அணுகிச் செல்வது மட்டும் தான்.* இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டால் வாழ்வில் இருக்கும் போராட்டம், கொந்தளிப்பு அனைத்தும் நீங்கி அமைதி பெற்று விடுவோம். * கடவுள் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உண்மையானதாக இருக்குமானால், உங்களுடையது என கருதுகின்ற அனைத்தும் அவருடையது என்று நம்புங்கள்.- விவேகானந்தர்