உள்ளூர் செய்திகள்

உன் கடமை புனிதமானது

* கடவுள் மீது அன்பு செலுத்த வேண்டும். அது நமது கடமை என்று எண்ண வேண்டும்.* வெற்றியில் உனக்கு விருப்பம் இருக்குமானால், வாழ்க்கையில் ஆணவத்தை முற்றிலும் ஒழித்துவிடு.* வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு மத்தியிலும் தெய்வத்தன்மையை மறக்காமல் இருக்க வேண்டும்.* எந்தச் சூழ்நிலையிலும், எவருடைய குணம் உயர்ந்ததாக இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.* நாம் நம்மைப்பற்றி எண்ணாத நேரங்களில் மட்டுமே நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் அனுபவிக்கிறோம்.* இறைவனிடம் அனைத்து இயல்புகளும் இருந்தாலும், அவற்றை மனித இயல்பு மூலமாகத்தான் காண முடியும்.* நீ செய்யும் கடமை ஒவ்வொன்றும் புனிதமானது. அதை பக்தியுடன் செய்வது மிக உயர்ந்த தெய்வ வழிபாடு.- விவேகானந்தர்