வீண் பேச்சு வேண்டாமே...
UPDATED : பிப் 22, 2022 | ADDED : பிப் 22, 2022
* வீண் பேச்சு பேசுவோர் ஏழ்மை நிலையை அடைவர். * நாம் ஓய்வு எடுக்க நிழலான இடத்தில் அமர்வோம். அதுபோல்தான் நமக்கும் உலகுக்கும் உள்ள உறவு.* ஒரு செயலை செய்வதற்கு முன் அதன் முடிவை எண்ணிப் பாருங்கள். * அதிகமான பாவங்கள் நாக்கினால்தான் உண்டாகின்றன. * உப்பை நீர் கரைப்பது போல, நல்ல குணம் பாவத்தை கரைத்துவிடும். * உங்களை நம்பி ஒருவர் சொல்லும் செய்தியை பாதுகாப்பாக வைத்திருங்கள். * வட்டி எவ்வளவுதான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போகக்கூடியதே. - பொன்மொழிகள்