பதவி வரும்போது பணிவு வர வேண்டும்...
UPDATED : பிப் 16, 2022 | ADDED : பிப் 16, 2022
* பதவி உங்களைத்தேடி வரும்போது பணிவாக இருங்கள். * அற்ப விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர். * நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள்.* உணவுப் பொருட்களை பதுக்காமல் மக்கள் தேவைக்கு விற்பனை செய்யுங்கள்.* ஏழைகளுக்காக பாடுபடுபவர் இறைவனின் அன்புக்கு உரியவர். * ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல்.* பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.* நதிக்கரையில் அமர்ந்திருந்தாலும் தண்ணீரை வீணாக்காதீர்.* விருந்தினர் வீட்டிற்கு வந்தால் அவர்களை உபசரியுங்கள். * கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள். அதன் உண்மையை பாருங்கள். - பொன்மொழிகள்