உள்ளூர் செய்திகள்

மனம் போன போக்கிலே...

* மனம்போன போக்கில் நடக்காமல், மறுமைக்கு தேவையானதை செய்யுங்கள். * நீங்கள் சொன்னதே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.* கேட்டதை எல்லாம் உண்மை என்று நம்பாதீர்கள். * பணம், பதவி இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்ளுங்கள். * புன்னகை செய்யவும், நன்றி சொல்லவும் மறக்காதீர். * ஒருவர் சொன்னதை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.* அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.* தேவைக்கு அதிகமாக எதையுமே எதிர்பார்க்காதீர்கள். * நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள். * எந்தவொரு பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.* அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பேசாதீர். - பொன்மொழிகள்