உள்ளூர் செய்திகள்

பக்கத்து வீட்டாருடன் அன்பு கொள்ளுங்க பெண்களே!

* தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி வேதனைப்படுத்தும் பெண் நரகத்திற்கே செல்வாள். அதே நேரம் தொழாத, தர்மம் செய்யாத, நோன்பு நோற்காதவளாக இருந்தாலும், ஒரு பெண் பக்கத்து வீட்டாருடன் அன்பு கொண்டிருந்தால் அவள் சொர்க்கம் நுழைவாள்.* ஒரு மனைவிக்குரிய செல்வத்தை எல்லாம் அவள் கணவன் செலவு செய்து அழித்து விடுவானாயின், அதற்காக அவள் தன் கணவனைப் பார்த்து, “ என் செல்வத்தை எல்லாம் அழித்துவிட்டாயே,” என்று கடிந்து கொள்வாளேயானால், அவள் நாற்பது ஆண்டு காலம் செய்த நன்மைகள் அழிக்கப்பட்டு விடும்.* ஐங்காலமும் தொழுது, ரமலான் மாதம் நோன்பும் நோற்று, தன்னை எந்த கெட்ட செயலிலும் ஈடுபடுத்தாமல், கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண், அவள் விரும்புகிற சொர்க்கத்தில் நுழைவாள்.* உங்களில் ஒருவருக்கொருவர் காலில் விழுந்து தலைவணங்க (ஸஜதா) செய்ய ஏவி இருந்தால், மனைவி கணவனுக்கு தலை வணங்க ஏவி இருப்பேன். அதற்கு இடமில்லை. இறைவனுக்கு மட்டுமே தலை வணங்க வேண்டும்.* வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால், அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது.* சில பெண்களின் நடுவே ஒரு நோயாளி நடந்து சென்றார். அது சமயம் அப்பெண்கள் அவரை பரிகாசம் செய்தனர். அந்த செயலால் அந்த பெண்களில் ஒருவர் அதே நோயால் மிகவும் பாதிக்கப்பட்டார்.* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.- நபிகள் நாயகம் அறிவுரை