குர்ஆன் பொன்மொழிகள்
UPDATED : ஏப் 06, 2017 | ADDED : ஏப் 06, 2017
* ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.* இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே.* இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.* இறைவனைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள எவரும் மறைவான உண்மைகளை அறியமாட்டார்.* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. எந்த பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.