பொன்மொழிகள்
UPDATED : அக் 26, 2018 | ADDED : அக் 26, 2018
* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை கைவிடுங்கள். எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் கைவிடுங்கள்.* கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் உணர்ச்சி வசப்பட்டு நம்பி விடாதீர்கள். அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.