பொன்மொழிகள்
UPDATED : செப் 27, 2019 | ADDED : செப் 27, 2019
* பெருமைக்காக ஆடம்பரச் செலவு செய்பவர்கள் ஏழ்மையில் சிக்கி துன்பப்படுவர்.* போட்டிக்காகவும், பெருமைக்காகவும் நடத்தப்படும் விருந்துக்கு செல்லாதீர்கள்.* தீயில் இட்ட தங்கம் ஆபரணமாக மாறுவது போல, துன்பத்தால் நற்பண்புகள் மனதில் உருவாகின்றன. * நாவை அடக்கி வையுங்கள்; அது உங்களுக்கு அடிபணிந்து இயங்கட்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது. * உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் கேட்டதை எல்லாம் சொல்வதைக் கைவிடுங்கள்.