உள்ளூர் செய்திகள்

உண்மை பேசுங்கள்

* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று. * பொறாமை உணர்ச்சியால் நயவஞ்சகன் பாதிக்கப்படுகிறான்.* சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்லாதீர்கள். * பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன், இறைவனின் கட்டளையை மீறுகிறான்.* கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர்.* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையும் கவனிக்கிறான்.* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள். * வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.* எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.* நீங்கள் செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.- பொன்மொழிகள்