உள்ளூர் செய்திகள்

சந்ததி நலமாக வாழ...

* தர்மம் செய்தால் உங்களது சந்ததியும் நலமாக வாழும். * நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமா... பிறருக்கு உதவுங்கள். * நோய்களில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள். * கஞ்சனாக இருக்காதீர்கள். அது யாருக்கும் பயன்தராது. * அனாதைகள், ஏழைகளுக்கு உணவு கொடுங்கள். * எளிமை என்பது இறைநம்பிக்கையின் அடையாளம். * உங்களை புகழ்ந்து பேசும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி நில்லுங்கள். * கவுரவத்திற்காக ஆடம்பர உடை வேண்டாம்.* உண்மையை மறைத்து பொய் கூறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை.* பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.* பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல.* வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான்.* ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.- பொன்மொழிகள்