உள்ளூர் செய்திகள்

கேள்வி பிறந்தது எங்கு...

* ஏன் எதற்கு எதனால் என ஒவ்வொரு செயலிலும் உங்களுக்குள்ளே கேட்டுக் கொள்ளுங்கள். தெளிவு கிடைக்கும். * குறிப்பறிதல் இல்லாத குணமுடையவரிடம் அதிகம் பேசாதீர்.* உயர்ந்த எண்ணம் உடையவர்கள் பசி தாகத்தை பொருட்படுத்த மாட்டார்கள்.* நம்பியவருக்கும், நம்பாதவருக்கும் நல்லதையே செய்யுங்கள். * தீயவர்கள் நல்லவர்களின் உதவியை நாடமாட்டார்.* பெண்களுக்கு மரியாதையை கொடுப்பவர் உயர்வர். * உறங்குவதற்கு முன்பாக அன்றைக்குரிய செயல்களை திரும்ப சிந்தியுங்கள். * மரங்களை நட்டுவித்தால் போதாது அது வளர்வதற்கு தண்ணீரும் ஊற்றுங்கள்.- பொன்மொழிகள்