தவக்குல்
UPDATED : செப் 06, 2024 | ADDED : செப் 06, 2024
ஒரு பொருளை அடைய மனிதன் தன்னால் ஆன முயற்சிகளில் ஈடுபடுவான். அது கிடைக்காவிட்டால், “என்னால் ஆன முயற்சிகளை செய்தேன். ஆனால் பலன் கிடைக்கவில்லை. அதை பெறச் செய்வது உன் பொறுப்பு'' என இறைவனிடம் முறையிட வேண்டும். இவ்வாறு பொறுப்புகளை அவனிடம் ஒப்படைப்பதற்கு 'தவக்குல்' என்று பெயர். பாதுகாவலனான அவனை ஏற்காதவர்கள் எப்போதும் கவலையுடன் இருக்க நேரிடும். மனதை அவன் பக்கம் திருப்பினால் நிம்மதிக்கு குறைவிருக்காது.