உள்ளூர் செய்திகள்

வானுலகம் சென்றவர்

72 மொழிகளில் போதனை செய்து, மக்கள் வாழ்வதற்கு வசதியாக 100 நகரங்களை உருவாக்கியவர் ஹஜ்ரத் இத்ரீஸ் நபி. பன்றி, கழுதை, நாய், கோவேறு கழுதையின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது என சீடர்களுக்கு அறிவுரை கூறினார். தினமும் 12 ஆயிரம் தடவை 'தஸ்பீஹ்' ஓதினார். இவரது தொழுகையில் வானவர்களும் பங்கேற்பார்கள். முப்பது முறை வானுலகம் சென்று இறை ரகசியங்களை அறிந்து வந்தார்.