வேண்டாமே ஆணவம்
UPDATED : அக் 02, 2025 | ADDED : அக் 02, 2025
பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர். 'நான்' என்னும் அகந்தை அவரது கண்களில் தெரிந்தது. எதிரே வந்தவர்களை அலட்சியமாக கருதி கேலி செய்தார். அவரை பூமிக்குள் புதையச் செய்து தண்டித்தான் இறைவன். மறுமை நாள் வரும் வரை அவ்வாறே பூமிக்குள் அவன் அழுந்திக் கிடப்பான். கல்வி, பணம், அழகு என எந்த விஷயத்திலும் ஆணவம் கொள்வது கூடாது.