அழகாக இருந்தால்...
UPDATED : மார் 31, 2024 | ADDED : மார் 31, 2024
ஆடம்பரமாக உடுத்துபவர், உதவி செய்ததை மற்றவர் முன் சொல்லிக் காட்டுபவர், பொய் சத்தியம் செய்தவர் ஆகியோருக்கு மறுமை நாளில் தண்டனை உண்டு. அத்துடன் துாய்மை மிக்க சுவனத்திற்குள் அவர்கள் நுழைய அனுமதி கிடையாது. சிலர் அழகுபடுத்திக் கொள்ளும் விதத்தில் ஆடை அணிவார்கள். இவர்களுக்கு தண்டனை கிடையாது. ஏனெனில் அவர்கள் துாய்மையை விரும்புகிறார்கள். ஒருவர் தன்னை சுத்தமாகவும், அழகுபடுத்திக் கொள்ளவும் உரிமை உண்டு.