நமக்கான வேலை
UPDATED : மே 03, 2024 | ADDED : மே 03, 2024
நபிகள் நாயகம் தன் மகள் பாத்திமா மீது அன்பு வைத்திருந்தார். திருமணமான பிறகு ஒருமுறை பாத்திமா அவரைக் காண வந்தார். அப்போது அவரிடம், ''நான் வீட்டில் கடுமையாக வேலை பார்க்கிறேன். கை, கால் வலிக்கிறது. அதனால் எனக்கு உதவி செய்ய ஆட்கள் தேவை'' என்றார். அதற்கு அவர், ''மகளே... கடுமையான வேலையாக இருந்தாலும் நாம் தான் செய்ய வேண்டும். உடல் களைப்படையும் நேரத்தில் பிரார்த்தனை செய். வேலையை முடிப்பதற்குரிய சக்தியைக் கேள். அவன் உனக்கு அருள் செய்வான்'' எனக் கூறினார்.