இறைவனே நிச்சயிக்கிறான்
UPDATED : செப் 07, 2018 | ADDED : செப் 07, 2018
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று மனிதன் நினைக்கிறான். மனதில் நினைத்த பெண்ணை திருமணம் செய்யும் உரிமை மனிதனுக்கு இல்லை. இறைவன் எந்தப் பெண்ணை மணம் முடிக்க நிச்சயிக்கிறானோ அவளே மனைவியாக அமைவாள். ''இறைவனே உங்களில் இருந்தே உங்களுக்காக மனைவியை படைத்திருக்கிறான். நீங்கள் மனஅமைதி பெறுவதற்காக உங்கள் இருவருக்கும் இடையில் அன்பையும், நேசத்தையும் உண்டு பண்ணி உள்ளான். உங்கள் மனைவியிடமிருந்து பிள்ளைகளையும், பேரன், பேத்திகளையும் உற்பத்தி செய்து நல்ல ஆகாரங்களை புகட்டுகிறான்'' என்கிறது குர்ஆன்.