உள்ளத்தில் பிடித்த துரு நீங்கட்டும்
UPDATED : செப் 04, 2022 | ADDED : செப் 04, 2022
இரும்பு கடினத்தன்மையுடைய பொருட்களில் ஒன்று. இது நீண்ட நாட்கள் தண்ணீரில் இருந்தால் துருப்பிடித்து விடும். அதுபோல மனிதரின் உள்ளமும் இரும்பை விட வலிமையானது. பொறாமை என்னும் வேண்டாத குணம் மனிதனிடம் புகுந்து விட்டால் அவரது உள்ளம் துருப் பிடிக்க ஆரம்பித்து விடும். 'உள்ளத்தில் பிடிக்கும் துரு... நீங்குவதற்கு நல்ல வாசகங்களை ஓதுங்கள்' என்கிறார் நாயகம்.