வாய் விட்டு சிரியுங்கள்
UPDATED : ஜூலை 07, 2022 | ADDED : ஜூலை 07, 2022
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சும்மாவா சொன்னார்கள்.மன அழுத்தம் உள்ளவர்கள் எப்போதும் சிடு சிடு என இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் மனம் விட்டு பேசினாலே போதும் இயல்பு நிலைக்கு வரலாம். அரசர்கள் அரண்மனைகளில் விகட கவிகளை ( நகைச்சுவை புலவர் ) நியமித்திருப்பர். நாடகம், சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு தனி இடம் உண்டு. இவர்களது நடிப்பால் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவர். மன அழுத்தமுடையவர்கள் இதனை பார்த்தாலே அதிலிருந்து விடுபடுவார்கள்.