அறிவியல் ஆயிரம் : உருகும் பனி; உயரும் கடல்
அறிவியல் ஆயிரம்உருகும் பனி; உயரும் கடல்முழுவதும் பனியால் சூழப்பட்டது அண்டார்டிகா. இதனால் உயிரினங்கள் வாழ முடியாது. பூமியின் மொத்த நன்னீரில் 70 சதவீதம் இதன் பனிப்பாறையில் உள்ளது. இவை முழுவதும் உருகினால் கடல்நீர்மட்டம் 183 அடி உயரும். இந்நிலையில் மேற்கு அண்டார்டிகா பனிப்படலம் ஒரு பேரழிவின் விளிம்பில் உள்ளது. இது உலக கடல்நீர்மட்டத்தை 9.8 அடி உயர்த்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது தவிர உருகும் நீர் உலகின் கடல் சுழற்சியைக் குறைக்கும், காற்று மண்டலங்களை மாற்றி தெற்கு அரைக்கோளத்தின் காலநிலையைப் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.